Wednesday, October 16, 2013

சமூக சீர்கேட்டின் பிறப்பிடம் சினிமா..







         மனிதர்கள் தேடும் பொழுதுபோக்கிலேயே மிகவும் மோசமானதும், கீழ்த்தரமானதும் தான் இந்த சினிமா துறை.

பொய், பித்தலாட்டம், போதை, விபச்சாரம் என, உலகிலுள்ள அத்துனை  
அய்யோக்கியத் தனங்களையும் நேரடியாக காட்�டியும், கற்றும் தரப்படுவது இங்கேதான்.
கொலை,கொள்ளை,கற்பழிப்பு என சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு சீர்கேடுகளும், இங்கிருந்து பாடம் கற்றே செய்யப்படுகின்றன.

அவர்களில், "கில்லி" படத்தை பார்த்து மிளகாய் தூள் தூவினேன், "பருத்திவீரன்"படம் கற்பழித்தேன் என்று வெளிப்படையாக வாக்குமூலம் கொடுத்த குற்றவாளிகளும் சிலர் உண்டு..
அவர்கள் காசுக்காக நடிக்கும் கூத்தாடிகள்.அதைப் பார்த்து செய்தவனுக்கு அறிவில்லையா..? என்று சிலர் கேட்கும் கேள்வியும் நியாயமானது தான்.

ஒருகாலத்தில் வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்கப் பட்ட சினிமா, இன்று பலரின் வாழ்க்கையின் முன்மாதிரியாகவே மாறிவிட்டது.வெறும் கூத்தாடிகளாக பார்க்கப் பட்டவர்கள், இன்று பலரின் வாழ்க்கையின் வழிகாட்டியாகவே மாறிவிட்டார்கள்.

கல்லூரி காதலையே மிகவும் நாகரீகமாக இலை மறை காயாக காட்டிகொண்டிருந்த தமிழ் சினிமா,இன்று விடலைப் பருவத்தின் பள்ளிக் காதலை கூட இளம் சமுதாயத்தின் உணர்ச்சிகளை உடைத்தெறியும் விதத்தில் மிகவும் வெளிப்படையாய் காட்ட ஆரம்பித்து விட்டது.அதற்��கான விளைவையும் இன்று பல வீடுகள் பார்த்துவிட்டன.சினிமா பார்த்து
சீரழிந்த சில விடலையர்களின் செய்கைகளால், எத்தனைப் பெற்றோர்கள் கண்ணீரையும் அவமானத்தையும் சந்தித்துள்ளனர்.

இன்னும் இதுபோல எத்தனையோ சீர்கேடுகளுக்கு பிறப்பிடமாக இருக்கும் நடிகர்களைதான் இன்றைய இளைஞர்கள் தலைவனாக தலைதூக்கி வைத்துளள்ளனர்.
இப்படிப்பட்ட விபச்சார ஆண்களை தான் இளம்பெண்கள் கனவு நாயகனாக நினைக்கிறார்கள்.

தனக்கு வரப்போகும் கண்வன் கூ�ட சூர்யா மாதிரி இருக்க வேண்டும், ஆர்யா மாதிரி இருக்க வேண்டும் என்று வெளிப்படையாய் சொல்லும் அளவுக்கு இன்றைக்ககு தரம்கெட்டு திரியும் பெண்கள் ஏராளம்.இதில் முஸ்லீம் பெண்களும் அடங்குவர் என்பது இன்னும் வேதனைக்குரிய விஷயம்.

சிந்தியுங்கள்..!!
அவர்களின் ஒவ்வொரு அசைவும் காசுக்காக..
அவர்களின் சிரிப்பு உண்மையல்ல..காசுக்காக..
அவர்களின் அழுகை உண்மையல்ல..காசுக்காக..
அவர்களின் நடை, உடை,பேச்சு,பழக்கம் என்று,அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் எதுவுமே உண்மையல்ல..காசுக்கான போலி வேஷங்கள்.

உடலையும்,உணர்வுகளையும், வியாபாரம் செய்யும் பிறவிகளை உங்கள் முன்மாதிரியாக ஆக்காதீர்கள்.இதனால் இழப்புகள் மட்டுமே உங்களுக்கு.

இதுபோன்ற பலரின் அறிவுறத்தலை கேட்டும் நீங்கள் உங்கள் நிலையை தொடர்ந்தால், கீழ்காணும் இறைவசனம் உங்களையே குறிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

"ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

அல்குர்ஆன் 7 : 179
   

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல தோடக்கம்
    முதல் பதிவே சினிமா சீரழிவுக்கு எதிராக வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்மத்த்ல்லாஹ்.. ஜஸாக்கல்லாஹ் ஹைரா..

      Delete