Thursday, October 17, 2013

போலி அழைப்பாளர்கள்.

                                                    ஏக இறைவனின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ,,


நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-

மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும்.கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் (நரகத்தைச்) சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, 'இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?' என்று கேட்பார்கள்.




அதற்கு அவர், 'நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்" என்று கூறுவார்.


உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

புகாரி-3267

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக..

No comments:

Post a Comment